செய்திகள்
தற்கொலை

ஆப்பக்கூடல் அருகே கள்ளக்காதலன் இறந்த சோகத்தில் கள்ளக்காதலி தற்கொலை

Published On 2019-12-23 05:54 GMT   |   Update On 2019-12-23 05:54 GMT
ஆப்பக்கூடல் அருகே கள்ளக்காதலன் இறந்த சோகத்தில் கள்ளக்காதலி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆப்பக்கூடல்:

திருப்பத்தூர் மாவட்டம், மற்றபள்ளி பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் இதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சத்தியமூர்த்திக்கும் கார்த்திகா(28) என்பருக்கும் திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆனநிலையில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இவரது பக்கத்து ஊரை சேர்ந்தவர் ஜெகதீஸ்(25). இவர் அந்த பகுதியில் அடிக்கடி சென்று வந்து கொண்டிருந்ததில் கார்த்திகாவுடன் பழக்கம் ஏற்பட்டது.

பின்பு இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் சென்னிமலைக் கவுண்டன் புதூரில் உள்ள தனது நண்பர் சண்முகமூர்த்தி வீட்டிற்கு, ஜெகதீஸ் கார்த்திகாவை கூட்டி வந்து தங்கி இருந்தார்.

இதனையடுத்து கார்த்திகாவை காணவில்லை என்று கணவர் மற்றும் உறவினர்கள் திருப்பத்தூர் பகுதிகளில் தேடியுள்ளனர். தன்னை தேடி கொண்டு இருப்பது தெரியவர கார்த்திகா மீண்டும் திருப்பத்தூர் அருகே மற்றபள்ளியில் தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் ஜெகதீஸ் கார்த்திகா உடனான உறவு தெரிந்து இவர்களை பிரித்து வைத்து, கார்த்திகாவை சத்தியமூர்த்தி கண்டித்துள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கார்த்திகாவை பிரிந்த ஜெகதீஸ் தற்கொலை செய்து கொணடார். ஜெகதீஸ் இறந்து போனதில் மனமுடைந்த இருந்த கார்த்திகா மீண்டும் ஆப்பக்கூடல் சென்னி மலைக்கவுண்டன்புதூரில் உள்ள ஜெகதீசின் நண்பர் சண்முகமூர்த்தி வீட்டிற்கு நேற்று காலை இவர் மட்டும் தனியாக வந்துள்ளார்.

கார்த்திகா தனது துணிமணிகளை எடுத்துக் கொண்டு சென்று விடுவதாக சண்முகமூர்த்தியிடம் கூறியுள்ளார். இந்நிலையில் சண்முக மூர்த்தி நேற்று காலை வெளியில் சென்று வீடு திரும்பி வந்து பார்க்கையில் கார்த்திகா மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

அதிர்ச்சியடைந்த சண்முகமூர்த்தி ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த கார்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News