செய்திகள்
பவானியில் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
பவானியில் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பவானி:
பவானியை சேர்ந்தவர் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இவர் பவானியில் ரோட்டோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயதான, 6-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அச்சிறுமி கூச்சலிட்டதால் அவரது தாய் அதிர்ச்சி அடைந்து தொழிலாளியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளி இருவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அச்சிறுமியின் தாய் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளியை கைது செய்தனர்.
பவானியை சேர்ந்தவர் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இவர் பவானியில் ரோட்டோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயதான, 6-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அச்சிறுமி கூச்சலிட்டதால் அவரது தாய் அதிர்ச்சி அடைந்து தொழிலாளியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளி இருவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அச்சிறுமியின் தாய் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளியை கைது செய்தனர்.