செய்திகள்
தற்கொலை

படப்பை அருகே தந்தை கண்டித்ததால் தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை

Published On 2019-12-21 06:41 GMT   |   Update On 2019-12-21 06:41 GMT
படப்பை அருகே தந்தை கண்டித்ததால் தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

படப்பை:

படப்பையை அடுத்த சோமங்கலம் மேட்டூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் குசேலன். இவரது மகன் திருமூர்த்தி (வயது 22). இவர் உயர்ரக செல்போன்களை திருடி விற்று உல்லாசமாக வாழ்ந்து வந்தார்.

ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு செல்போன் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தார். திருமூர்த்தி வேலைக்கு எங்கும் செல்லாமல் குடித்து விட்டு ஊதாரி தனமாக ஊர் சுற்றி வந்தார். இதனால் அவரது தந்தை, திருமூர்த்தியை கண்டித்துள்ளார்.

இதில் மனம் உடைந்த திருமூர்த்தி வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

Tags:    

Similar News