செய்திகள்
கைது

படப்பை அருகே மண்குவாரியில் காசாளரை வெட்டி ரூ. 1½ லட்சம் பறித்த ரவுடி கைது

Published On 2019-12-20 06:43 GMT   |   Update On 2019-12-20 06:43 GMT
படப்பை அருகே மண்குவாரியில் காசாளரை வெட்டி ரூ. 1½ லட்சம் பறித்த ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படப்பை:

படப்பை அடுத்த கரசங்கால் பகுதியை சேர்ந்தவர் அருண் என்கிற அருண் குமார்.

இவர் மீது மணிமங்கலம், சோமங்கலம், ஒரகடம், ஓட்டேரி உள்ளிட்ட போலீஸ் நிலையத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்த ரவுடி அருண்குமாரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் அருண் குமார் தனது கூட்டாளிகளுடன் படப்பை அடுத்த மணிமங்கலம் ஏரியில் உள்ள சவுடு மண் குவாரிக்கு சென்று அங்கு இருந்த காசாளரை கத்தியால் தாக்கி ரூ. 1 லட்சத்து 96 ஆயிரம் மற்றும் 2 செல்போன் ஆகியவற்றை கொள்ளயடித்து சென்றனர்.

இதுகுறித்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை தேடி வந்தனர்.

ஆதனுர் கூட்டு சாலையில் மறைந்து இருந்த ரவுடி அருண்குமார் மற்றும் கூட்டளி சுரேஷ் ஆகிய 2 பேரை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News