செய்திகள்
பாலசுப்பிரமணியன்

தரங்கம்பாடி அருகே மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி

Published On 2019-12-18 12:35 GMT   |   Update On 2019-12-18 12:35 GMT
தரங்கம்பாடி அருகே மின்மோட்டாரை பழுது நீக்கியபோது மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலியானார்.

தரங்கம்பாடி:

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார் கோவில் ஒன்றியம் காளஹஸ் திநாதபுரம் கிராமம் உமையாள் புரத்தை சேர்ந்தவர் பரமசிவன் மகன் பாலசுப்பிரமணியன் (வயது27). எலெக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று அப்பகுதியில் மின்வாரியத்தினர் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்திருந்தனர். இதையடுத்து பாலசுப்பிரமணியன் தனது வயலில் உள்ள பழுதான மின்மோட்டாரை பழுது நீக்க சென்றார்.

மோட்டாரை அவர் சரி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென மின்சாரம் வந்துள்ளது. இதில் பாலசுப்பிரமணியனை மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானர்.

இது குறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News