செய்திகள்
விபத்து

கூடுவாஞ்சேரி அருகே கல்லூரி மாணவர் விபத்தில் பலி

Published On 2019-12-16 16:50 IST   |   Update On 2019-12-16 16:50:00 IST
கூடுவாஞ்சேரி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:

மடிப்பாக்கம் அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது19). தனியார் மருத்துவ கல்லூரியில் பிசியோதெரபி 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் மோட்டார்சைக்கிளில் கூடுவாஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர் வந்த மோட்டார்சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இறந்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News