செய்திகள்
விபத்து

கூடுவாஞ்சேரி அருகே கல்லூரி மாணவர் விபத்தில் பலி

Published On 2019-12-16 11:20 GMT   |   Update On 2019-12-16 11:20 GMT
கூடுவாஞ்சேரி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:

மடிப்பாக்கம் அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது19). தனியார் மருத்துவ கல்லூரியில் பிசியோதெரபி 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் மோட்டார்சைக்கிளில் கூடுவாஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர் வந்த மோட்டார்சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இறந்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News