செய்திகள்
ஆசிரியையை கரம்பிடித்த தொழிலாளி - பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
ஈரோடு அருகே ஆசிரியையை கரம்பிடித்த தொழிலாளி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு திண்டல் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(வயது25) கட்டிட தொழிலாளி. இவர் கட்டிட பணிக்காக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வேலை பார்ப்பது வழக்கம் அப்போது ஈரோடு மாவட்டம் காஞ்சி கோவிலைச் சேர்ந்த நந்தினி (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
நந்தினி ஈரோட்டில் உள்ள தனியார் குழந்தைகள் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இருவரும் ஒன்றரை வருடமாக காதலித்து வந்தனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான். இவர்கள் காதல் விவகாரம் வீட்டில் தெரியவந்தது. பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 9-ந் தேதி அந்தியூர் குலதெய்வம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல் ஜோடி உயிருக்கு பயந்து நண்பர்கள் வீட்டில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பிரகாஷ் குடும்பத்தினரை பெண் வீட்டார் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காதல் ஜோடி பிரகாஷ்- நந்தினி இன்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு தனது உறவினருடன் வந்து பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். பின்னர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளியுங்கள் என்று அனுப்பி வைத்தனர்.
ஈரோடு திண்டல் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(வயது25) கட்டிட தொழிலாளி. இவர் கட்டிட பணிக்காக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வேலை பார்ப்பது வழக்கம் அப்போது ஈரோடு மாவட்டம் காஞ்சி கோவிலைச் சேர்ந்த நந்தினி (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
நந்தினி ஈரோட்டில் உள்ள தனியார் குழந்தைகள் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இருவரும் ஒன்றரை வருடமாக காதலித்து வந்தனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான். இவர்கள் காதல் விவகாரம் வீட்டில் தெரியவந்தது. பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 9-ந் தேதி அந்தியூர் குலதெய்வம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல் ஜோடி உயிருக்கு பயந்து நண்பர்கள் வீட்டில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பிரகாஷ் குடும்பத்தினரை பெண் வீட்டார் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காதல் ஜோடி பிரகாஷ்- நந்தினி இன்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு தனது உறவினருடன் வந்து பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். பின்னர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளியுங்கள் என்று அனுப்பி வைத்தனர்.