செய்திகள்
கைது

படப்பை அருகே மது பதுக்கி விற்ற வாலிபர் கைது

Published On 2019-12-16 14:10 IST   |   Update On 2019-12-16 14:10:00 IST
படப்பை அருகே மது பதுக்கி விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் பதுக்கி வைக்கப்பட்ட மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
படப்பை:

படப்பை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் வெளிமாநில மதுபாட்டில்களை மர்ம நபர்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சோமங்கலம் போலீசார் படப்பை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த செல்வகுமார் என்பவர் வீட்டில் வெளிமாநில மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Similar News