செய்திகள்
குழந்தையின் உடல்நிலை பாதிப்பால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை
வேதாரண்யம் அருகே குழந்தையின் உடல்நிலை பாதிப்பால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அண்ணாப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 35). விவசாயி. இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவர்களது குழந்தையின் உடல்நலம் அடிக்கடி சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது.
இதனால் கோவிந்தன் மனமுடைந்து காணப்பட்டார். வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் சம்பவத்தன்று இரவு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தன் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வாய்மேடு இன்ஸ்பெக்டர் சந்தானமேரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அண்ணாப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 35). விவசாயி. இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவர்களது குழந்தையின் உடல்நலம் அடிக்கடி சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது.
இதனால் கோவிந்தன் மனமுடைந்து காணப்பட்டார். வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் சம்பவத்தன்று இரவு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தன் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வாய்மேடு இன்ஸ்பெக்டர் சந்தானமேரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.