செய்திகள்
கலவை பஸ் நிலையத்தில் மின்சாரம் தாக்கி ஓட்டல் தொழிலாளி பலி
கலவை பஸ் நிலையத்தில் மின்சாரம் தாக்கி ஓட்டல் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த கலவை நைனார் தெருவை சேர்ந்தவர் சந்துரு (வயது58). இவரது மனைவி குட்டி. இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். சந்துரு கலவை பஸ் நிலையத்தில் போண்டா, பஜ்ஜி கடை வைத்து இருந்தார்.
நேற்றிரவு சந்துரு இயற்கை உபாதைக்காக கலவை போலீஸ் நிலைய சுற்று சுவர் அருகே சென்றார். பின்னர் அங்குள்ள ஹைமாஸ் விளக்கில் இருந்து சந்துரு மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட சந்துரு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சந்துரு மனைவி குட்டி கலவை போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து சந்துரு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.