செய்திகள்
விபத்து

கல்பாக்கம் அருகே கார் கவிழ்ந்து கணவன்-மனைவி பலி

Published On 2019-12-09 06:28 GMT   |   Update On 2019-12-09 06:28 GMT
கல்பாக்கம் அருகே கார் கவிழ்ந்து கணவன்-மனைவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

சென்னை கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல்வகாப் (48). இவரது மனைவி சுஜிதா (45).

இவர்கள் உறவினர்கள் 3 பேருடன் காரில் காரைக்காலில் நடை பெற்ற உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் சென்னை நோக்கி திரும்பி வந்து கொன்டிருந்தனர்.

நள்ளிரவு 2 மணியளவில் கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது.

இதில் காரை ஓட்டிவந்த அப்துல்வகாப், அவரது மனைவி சுஜிதா ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உடன் இருந்த உறவினர்கள் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து சதுரங்கபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News