செய்திகள்
தற்கொலை (கோப்புப்படம்)

காஞ்சிபுரம் அருகே 7 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை

Published On 2019-12-05 09:16 GMT   |   Update On 2019-12-05 09:16 GMT
காஞ்சிபுரம் அருகே நாளை வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் 7 மாத கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரியா (23). இவர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டனர். தற்போது பிரியா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

அவருக்கு நாளை வளைகாப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை பிரியா திடீரென வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News