செய்திகள்
தற்கொலை

பு.புளியம்பட்டி அருகே பிளேடால் கழுத்தை அறுத்து வட மாநில வாலிபர் தற்கொலை

Published On 2019-11-25 16:22 GMT   |   Update On 2019-11-25 16:22 GMT
பு.புளியம்பட்டி அருகே வட மாநில வாலிபர் தனக்கு தானே பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பு.புளியம்பட்டி:

புஞ்சைபுளியம்பட்டி அடுத்த விண்ணபள்ளியில் உள்ள தனியார் நூற்பாலையில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த வாலிபர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள விண்ண பள்ளியில் உள்ள ஒரு தனியார் மில்லில் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த பிட்டு பவுரி என்பவர் கடந்த 5 வருடமாக தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். மில்லில் உள்ள விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் இரவு 9 மணியளவில் விடுதியில் அவர் தனக்கு தானே பிளேடால் கழுத்தை அறுத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் ரத்தம் கொட்டிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரனை செய்து வருகின்றார்.

தற்கொலை செய்து கொண்ட பிட்டு பவுரி உடல் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

வட மாநில வாலிபர் பவுரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News