செய்திகள்
வேதாரண்யம் அருகே ஆட்டோ மோதி விவசாயி உயிரிழப்பு
வேதாரண்யம் அருகே ஆட்டோ மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கோவில் பத்து, மேலகாடு பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம் (வயது 58) விவசாயி. இவர் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோ அவர்மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றிய புகாரின் பேரில் வேட்டைகாரனிருப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருஞானம் வழக்குப்பதிவு செய்து விவசாயி மீது மோதிய ஆட்டோ டிரைவரை தேடி வருகிறார்.
வேதாரண்யத்தை அடுத்த கோவில் பத்து, மேலகாடு பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம் (வயது 58) விவசாயி. இவர் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோ அவர்மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றிய புகாரின் பேரில் வேட்டைகாரனிருப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருஞானம் வழக்குப்பதிவு செய்து விவசாயி மீது மோதிய ஆட்டோ டிரைவரை தேடி வருகிறார்.