செய்திகள்
ரஜினிகாந்த் - கமல்ஹாசன்

ரஜினி - கமல் இணைவது பற்றி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கிண்டல்

Published On 2019-11-21 05:11 GMT   |   Update On 2019-11-21 11:39 GMT
ரஜினி - கமல் அரசியலில் இணைவது பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஓ.எஸ் மணியன் கிண்டலாக பதில் அளித்துள்ளார்.
மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்பின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம், ரஜினி- கமல் அரசியலில் இணைவது பற்றி நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

இதற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்து கூறியதாவது:-



பாலும், மோரும் இணைந்தால் தயிராகும். ரஜினி, கமலும் இணைவது முறிந்த பாலும், திரிந்த தயிரும். இது இணையும் போது தயிர் ஆகாது. இதுதான் அவர்களுடைய இணைப்பு.

அ.தி.மு.க. எப்போதுமே உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. எங்களுடன் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைந்தால் அவர்களுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்போம்.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என்பது குறித்த வழக்கு கோர்ட்டில் உள்ளது. உண்மை நிலை கோர்ட்டு மூலம் மக்களுக்கு தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News