செய்திகள்
மரணம்

லிப்ட் பொருத்தியபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Published On 2019-11-08 07:59 GMT   |   Update On 2019-11-08 07:59 GMT
ஆதம்பாக்கம் அருகே லிப்ட் பொருத்தியபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்:

ஆதம்பாக்கம், ஏ.ஜி.எஸ். காலனி 1-வது தெருவில் புதிதாக 4 மாடி கொண்ட கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் மூவரசம்பேட்டையை சேர்ந்த நித்யானந்தம் (20) தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் அங்கு லிப்டை பொருத்தும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது மின்சாரம் தாக்கி நித்யானந்தன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News