செய்திகள்
மரணம்

சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

Published On 2019-11-05 08:41 GMT   |   Update On 2019-11-05 08:41 GMT
சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் பாஸ்கரன் (வயது 50).

இவர் சம்பவத்தன்று குத்துவக்கரையிலுள்ள ஒருவரது குடிசை வீட்டில் மின் சாதனம் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் பாஸ்கரன் படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவரை மாங்கானாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது பாஸ்கரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் பாஸ்கரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News