செய்திகள்
பல்லாவரம் அருகே தொழிலாளி அடித்துக்கொலை
பல்லாவரம் அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
பல்லாவரத்தை அடுத்த வெட்டல்லைன் பகுதியில் ராணுவ வீரர்களின் குடியிருப்பு உள்ளது.
நள்ளிரவு 12 மணி அளவில் இப்பகுதியில் உள்ள முட்புதருக்குள் ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு போலீசார் விரைந்து சென்றனர்.
அங்கு முட்புதருக்குள் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது நெற்றியில் மட்டும் ஆழமான காயங்கள் இருந்தன.
உடலை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கொடுங்கையூரை சேர்ந்த ஆனந்தன் (45) என்பது தெரிய வந்தது.
சம்பவ இடத்தில் ரத்தக்கரைகள் எதுவும் இல்லை. அவரை வேறு இடத்தில் வைத்து அடித்துக் கொலைசெய்துவிட்டு, உடலை இப்பகுதியில் வீசிச்சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனந்தனை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லாவரத்தை அடுத்த வெட்டல்லைன் பகுதியில் ராணுவ வீரர்களின் குடியிருப்பு உள்ளது.
நள்ளிரவு 12 மணி அளவில் இப்பகுதியில் உள்ள முட்புதருக்குள் ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு போலீசார் விரைந்து சென்றனர்.
அங்கு முட்புதருக்குள் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது நெற்றியில் மட்டும் ஆழமான காயங்கள் இருந்தன.
உடலை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கொடுங்கையூரை சேர்ந்த ஆனந்தன் (45) என்பது தெரிய வந்தது.
சம்பவ இடத்தில் ரத்தக்கரைகள் எதுவும் இல்லை. அவரை வேறு இடத்தில் வைத்து அடித்துக் கொலைசெய்துவிட்டு, உடலை இப்பகுதியில் வீசிச்சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனந்தனை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.