செய்திகள்
கோப்புப்படம்

குடியாத்தம் மோர்தானா அணையில் குதித்து வியாபாரி தற்கொலை

Published On 2019-11-01 11:32 GMT   |   Update On 2019-11-01 11:32 GMT
குடியாத்தம் மோர்தானா அணையில் குதித்து வியாபாரி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:

குடியாத்தம் சுபேதா நகரை சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 37), மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது நண்பர் தரணம்பேட்டையை சேர்ந்த ரிஸ்வான் (வயது 35), ஏலச்சீட்டு நடத்தி வந்த இவர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். ரிஸ்வானிடம் சீட்டு பணம் கட்டியவர்கள் இதுபற்றி குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த வழக்கு வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரிஸ்வானிடம் சீட்டு பணம் கட்டிய சிலர் அலாவுதீனிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் அலாவுதீன் ரிஸ்வானுக்கு பணம் கொடுத்து ஏமாந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அலாவுதீன் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் மோர்தானா அணைக்கு சென்றார். அங்கு தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர்.

இந்தநிலையில் இன்று காலை அணையில்அலாவுதீன் பிணமாக மிதந்தார். குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர்.

போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News