செய்திகள்
வேலூர் ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு 10-ம் வகுப்பு மாணவி பலி
வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 10-ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி அருகே உள்ள குனிச்சியூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகள் அகல்யா (வயது 15). பர்கூரில் உள்ள விடுதியில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். பின்னர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டார். இன்று வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அகல்யா இறந்தார். மர்ம காய்ச்சலால் மாணவி பலியான சம்பவத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
வாணியம்பாடி அருகே உள்ள குனிச்சியூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகள் அகல்யா (வயது 15). பர்கூரில் உள்ள விடுதியில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். பின்னர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டார். இன்று வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அகல்யா இறந்தார். மர்ம காய்ச்சலால் மாணவி பலியான சம்பவத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.