செய்திகள்
விபத்து

படப்பை அருகே லாரி மோதி வாலிபர் பலி

Published On 2019-11-01 08:30 GMT   |   Update On 2019-11-01 08:30 GMT
படப்பை அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

படப்பை:

படப்பையை அடுத்த சேர பனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் பாலாஜி என்ற சோனு (வயது 22). ஒரகடம் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் படப்பை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சோனு பலியானார்.

Tags:    

Similar News