செய்திகள்
கோப்பு படம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2019-10-31 09:15 GMT   |   Update On 2019-10-31 09:15 GMT
ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த அமரன்பேடு கிராமத்தை சேர்ந்தவர் டில்லிகணேஷ் (வயது 36). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் மிஷின் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார்.

நேற்று பணி முடிந்து தொழிற்சாலையில் இருந்து தனது மோட்டர் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது சிபிகாட் சாலையில் சென்ற போது சாலையில் இருந்த பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்தார். இதில் டில்லிபாபு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தண்டலம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பொன்னேரியை அடுத்த ஆரூர் வடக்குபட்டையை சேர்ந்தவர் வேலு (வயது 52). கூலி தொழிலாளி. இவர், கடந்த 20-ந் தேதி தனது மகனுடன் பொன்னேரி சென்று கொண்டிருந்தார்.

சிங்கிலிமேடு புற்று கோவில் அருகே சென்ற போது, ஒரு மாடு குறுக்கே வந்தது. இதில், மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது.

இதில், மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து கீழே விழுந்த வேலுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட வேலு மேல்சிகிச்சைக்காக, சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
Tags:    

Similar News