செய்திகள்
படப்பை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
படப்பை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள விவேகானந்தர் நகரில் வசித்து வருபவர் லதா. இவர் மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு அவர் படப்பை பஜார் வீதியில் நடந்து சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் லதாவின் கழுத்தில் கிடந்த நகையை பறித்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.