செய்திகள்
பல்லாவரம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி- வாலிபர் கைது
பல்லாவரம் அருகே ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:
பல்லாவரத்தை அடுத்த பம்மல் - பொழிச்சலூர் சாலையில் தனியார் வங்கி ஏ.டி.எம். உள்ளது. நேற்று இரவு இந்த மையத்துக்குள் நுழைந்த வாலிபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றார். இது அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் தெரிந்தது.
இதை மும்பையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் பார்த்தனர். உடனே சென்னை சங்கர் போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை கைது செய்தனர். அவர் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த அருள்மணி (25) என்பது தெரிய வந்தது. அவர் வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டாரா? என்று விசாரணை நடந்து வருகிறது.
பல்லாவரத்தை அடுத்த பம்மல் - பொழிச்சலூர் சாலையில் தனியார் வங்கி ஏ.டி.எம். உள்ளது. நேற்று இரவு இந்த மையத்துக்குள் நுழைந்த வாலிபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றார். இது அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் தெரிந்தது.
இதை மும்பையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் பார்த்தனர். உடனே சென்னை சங்கர் போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை கைது செய்தனர். அவர் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த அருள்மணி (25) என்பது தெரிய வந்தது. அவர் வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டாரா? என்று விசாரணை நடந்து வருகிறது.