செய்திகள்
கொள்ளை

குத்தாலம் அருகே தொழில் அதிபர் வீட்டில் ரூ.13 லட்சம் - வைர நெக்லஸ் கொள்ளை

Published On 2019-10-21 10:07 GMT   |   Update On 2019-10-21 10:07 GMT
தொழில் அதிபர் வீட்டில் ரூ.13 லட்சம் - வைர நெக்லஸ் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குத்தாலம்:

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 65). தொழில் அதிபரான இவர் கியாஸ் ஏஜென்சி, ஷாப்பீங் மால் ஆகியவை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முத்துக்குமார், தனது நிறுவனங்களுக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவை பார்த்த போது அதில் இருந்த ரூ.13 லட்சம், மற்றும் வைர நெக்லஸ், 8 பவுன் நகை ஆகியவை கொள்ளை போய் இருந்தது தெரிய வந்தது.

இந்த திருட்டு பற்றி முத்துக்குமார், குத்தாலம் போலீசில்புகார் செய்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை டி.எஸ்.பி. வெள்ளத்துரை சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து விசாரித்தனர்.

Tags:    

Similar News