செய்திகள்
கைது

வேதாரண்யம் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது

Published On 2019-10-19 08:52 GMT   |   Update On 2019-10-19 08:52 GMT
வேதாரண்யம் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், சுப்பிரமணியன் போலீசார் பால்ராஜ், அசோக்குமார் ஆகியோர் வேதாரண்யம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆறுகாட்டுத் துறையில் சாராயம் விற்ற ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் நெய்விளக்கு பகுதியை சேர்ந்த சங்கர் (33) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து 110 லிட்டர் புதுச்சேரி சாராயத்தை கைப்பற்றினர்.

இதேபோல் கரும்பம்புலம் கடைவீதியில் சாராயம் விற்ற ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர் கருப்பம்புலம் சிவானந்தம் (33) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து 55 லிட்டர் புதுச்சேரி சாராயத்தை கைப்பற்றினர்.

Tags:    

Similar News