செய்திகள்
வட மாநில வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது
தாம்பரம் அருகே வடமாநில வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ரைக்கன் கான் ( 26) இவர் பழைய பல்லாவரத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார் நேற்று பல்லாவரம் பகுதியில் நடைபெறும் சந்தைக்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்கு நடந்து வந்தபோது எதிரே வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2000 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
தகவல் அறிந்த போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது பணம் பறித்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த ஆனந்தை கைது செய்தனர். அவருடன் கொள்ளையில் ஈடுபட்ட தமிமுன் அன்சாரியை தேடி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ரைக்கன் கான் ( 26) இவர் பழைய பல்லாவரத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார் நேற்று பல்லாவரம் பகுதியில் நடைபெறும் சந்தைக்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்கு நடந்து வந்தபோது எதிரே வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2000 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
தகவல் அறிந்த போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது பணம் பறித்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த ஆனந்தை கைது செய்தனர். அவருடன் கொள்ளையில் ஈடுபட்ட தமிமுன் அன்சாரியை தேடி வருகின்றனர்.