செய்திகள்
போராட்டம்

காஞ்சிபுரத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-09-20 06:56 GMT   |   Update On 2019-09-20 06:56 GMT
காஞ்சிபுரத்தில் வழக்கறிஞரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் வழக்கறிஞராக இருப்பவர் சந்திரசேகர். இவர் சின்ன காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்திற்கு ஒரு வழக்கு சம்பந்தமாக சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் வழக்கறிஞர் சந்திரசேகரை தரக்குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு தெரிந்தது.

இதையடுத்து காஞ்சிபுரம் பார் அசோசியேசன், காஞ்சிபுரம் லாயர்ஸ் அசோசியேசன், காஞ்சிபுரம் அட்வகேட் அசோசியேசன் ஆகிய சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் கார்த்திகேயன், பார்த்தசாரதி, ரவிக்குமார் மற்றும் சத்தியமூர்த்தி, தாங்கிபழனி, துரைமுருகன், இ.எல்.கண்ணன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சிவலிங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
Tags:    

Similar News