செய்திகள்
திசையன்விளையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
ராகுல் காந்தியை அவதூறாக பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டித்து திசையன்விளையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திசையன்விளை:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டித்து திசையன்விளையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.எம்.சிவக்குமார் தலைமை தாங்கினார்.
மாநில காங்கிரஸ் விவசாய பிரிவு செயலாளர் விவேக் முருகன், மாவட்ட துணைத்தலைவர் விஜயபெருமாள், நகர காங்கிரஸ் தலைவர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத்தலைவர் அலெக்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.