செய்திகள்
கைது

10-ம் வகுப்பு மாணவி கடத்தல்: போக்சோவில் வாலிபர் கைது

Published On 2019-09-19 10:34 GMT   |   Update On 2019-09-19 10:34 GMT
அவினாசி அருகே ஆசை வார்த்தை கூறி 10-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அவினாசி:

அவினாசி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் ஒரு மாணவி 10-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியிடம் ஈரோடு மாவட்டம் நம்பியூர் ராயர்பாளையத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் வேலு என்ற வேலுசாமி (21) என்பவர் பழகி வந்தார். 

இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமியைதிருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்றார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அவினாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமி மற்றும் அவரை கடத்திச்சென்ற வேலுவையும் தேடி வந்தனர். 

இந்நிலையில் வேலுவை போலீசார் கண்டு பிடித்தனர். அவர் மூலம் மாணவியை மீட்டனர். வேலுவை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

 

Tags:    

Similar News