செய்திகள்
திருவிடந்தையில் ஹெலிபேடு தளம் எதிரே சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறுவதை காணலாம்

மோடி-சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்தில் ஹெலிபேடு தளம் சீரமைப்பு

Published On 2019-09-19 08:49 GMT   |   Update On 2019-09-19 08:49 GMT
பிரதமர் மோடியும், சீன அதிபரும் அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதையடுத்து, திருவிடந்தை கிராமத்தில் அமைக்கப்பட்ட ஹெலிபேடை சீரமைக்கும் பணிகள் தொடங்கியது.
மாமல்லபுரம்:

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜிஜின்பிங்கும் அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந்தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தலைவர்கள் பார்வையிடும் இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். சீன அதிகாரிகளும் மாமல்லபுரத்தில் வந்து இடங்களை விரைவில் பார்வையிட உள்ளனர்.

மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிராமத்தில் ஏற்கனவே ராணுவ கண்காட்சியின்போது அமைக்கப்பட்ட ஹெலிபேடு தளத்தில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜிஜின்பிங்கும் ராணுவ ஹெலிகாப்டரில் வந்து இறங்க உள்ளனர்.

இதற்காக மீண்டும் அந்த ஹெலிபேடை சீரமைக்கும் பணிகள் நேற்று தொடங்கியது. தலைவர்கள் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி ஓட்டலுக்கு காரில் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையை முதற்கட்டமாக நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்க தொடங்கி விட்டனர்.

ஹெலிபேடு எதிரே இருந்த சாலை தடுப்பு சுவர்கள் 20 மீட்டர் தூரத்திற்கு இடிக்கப்பட்டு பாதுகாப்புபடை அதிகாரிகளின் கார்கள் வேகமாக வந்து திரும்புவதற்கு வசதியான ஏற்பாடுகளை நெடுஞ்சாலை துறையினர் செய்து வருகிறார்கள்.

ஹெலிபேடு சீரமைப்பு பணிகள் முடிந்ததும் இரு நாட்டு கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகளும் வான்வழி வெள்ளோட்டம் பார்க்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News