ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மீது கார் மோதல்: கணவன்-மனைவி பலி
ஸ்ரீபெரும்புதூர்:
ஓசூரை அடுத்த அவள பிள்ளை பகுதியைச் சேர்ந்தவர் குடவின் ராஜ் குமார் (55). ஓசூரில் உள்ள அசோக் லேலண்ட் அதிகாரியாக இருந்தார். இவரது மனைவி சொப்னா செல்வகுமாரி (50).
இவர்கள் இருவரும் நேற்று இரவு ஓசூரில் இருந்து காரில் ஸ்ரீபெரும்புதூர்- தாம்பரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
நாவலூர் என்ற இடத்தில் வந்தபோது சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது திடீரென கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் இருந்த குடவின் ராஜ், அவரது மனைவி சொப்னா செல்வகுமாரி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் விரைந்து வந்து பலியானவர்கள் உடல்களை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.