செய்திகள்
போலீசார் விசாரணை

துரைப்பாக்கம் வாலிபர் அடித்து கொலை- போலீசார் விசாரணை

Published On 2019-09-16 11:51 IST   |   Update On 2019-09-16 11:51:00 IST
துரைப்பாக்கத்தில் வாலிபர் அடித்துகொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோழிங்கநல்லூர்:

செம்மஞ்சேரி, குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் வெங்கடேசன் (வயது 32). வாட்டர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார்.

இவரது உறவினர் மஞ்சள் நீராட்டு விழா துரைப்பாக்கம் கண்ணகி நகரில் நடந்தது. அப்போது வெங்கடேசன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த செந்தில், குகன் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த செந்தில் அருகில் கிடந்த கட்டையால் வெங்கடேசனை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில், குகன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News