செய்திகள்
ஆலங்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
முன்னால் மத்தி மந்திரி பா.சிதம்பரம் கைதை கண்டித்து கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆலங்குடி:
முன்னால் மத்தி மந்திரி பா.சிதம்பரம் கைதை கண்டித்து கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு மாவட்டத் தலைவர் தர்மதங்கவேல் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், திருவரங்குளம் வட்டார தலைவர் சுந்தரம், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு, மற்றும் சிபிஜ-க்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாநில பொதுக்குழு உறுப்பினர் மகாதேவன், மாநில எஸ்.சி., எஸ்.டி., துணைத்தலைவர் கண்ணன், மாவட்ட துணைத் தலைவர்கள் சுந்தரம், ஜெயபால், மாவட்ட பொறுப்பாளர்கள் ஜெயராஜ், பாலகிருஷ்ணன், தர்மசெல்லத்துரை, சின்னப்பா, சாகுல்ஹமீது ,கணேசன், உட்பட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.