செய்திகள்
காட்பாடி அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
காட்பாடி அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
பொன்னை அடுத்த பழைய வசூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (32). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார்.
நேற்றிரவு பொன்னையில் இருந்து நெல்லிக்குப்பத்திற்கு ஆட்டோவில் பயணிகளை ஏற்றி சென்றார். பின்னர் பொன்னைக்கு மீண்டும் ஆட்டோவில் திரும்பினார்.
அவர் ஓட்டி வந்த ஆட்டோ ரெண்டாடி கூட் ரோட்டில் வந்தபோது பீகார் வாலிபர் சிக்கந்தர் என்பவர் சாலையை கடக்க முயன்றர். இதனால் தேவராஜ் திடீர் என பிரேக் போட்டார். ஆட்டோ சிக்கந்தர் மீது மோதி கவிழ்ந்தது. இதில் தேவராஜ் ஆட்டோவின் அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்த சிக்கந்தரை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.