செய்திகள்
எஸ்.பி. ஆபீசில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி.

வேலூர் எஸ்.பி. ஆபீசில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்

Published On 2019-09-05 16:09 GMT   |   Update On 2019-09-05 16:09 GMT
பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு வேலூர் எஸ்.பி. ஆபீசில் தஞ்சமடைந்தனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள கேதாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி (வயது 21). வாணியம்பாடியில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வருகிறார். அஸ்வினியும் அதே பகுதியை சேர்ந்த பிரிதிப்குமார் (25) என்கிற வாலிபரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அஸ்வினிக்கு வேரு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.

இதனால் கடந்த வாரம் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியே சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி வேலூர் எஸ்.பி. ஆபீசில் இன்று தஞ்சமடைந்தனர்.
Tags:    

Similar News