அரியலூர் அருகே விஜயகாந்த் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
அரியலூர்:
அரியலூர் ஒன்றியம் கடுகூர் கிராமத்தில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் கடுகூர் ஊராட்சிசெயலா ளர் பஞ்சநாதன் வரவேற்று பேசினார்.
மாவட்ட துணை செயலாளர் எழிலரசன், தெய்வசிகாமணி, திருமானூர் ஒன்றிய செயலாளர் ராஜ் குமார், ஜெகதீசன், தாபழுர் ஒன்றிய செயலாளர்அறிவ ழகன், அரியலூர் ஒன்றிய செயலாளர் சசிகுமார், ஒன்றிய தலைவர்செந்தில் குமார், மாவட்ட தொழிற் சங்கம் பழக்கடை பாண்டியன், வேல்முருகன், உடையார் பாளையம் செயலாளர் முனியசாமி, கடுகூர் கிளை செயலாளர் பிரகாஷ்,ஒன்றிய துணைசெயலாளர் ராஜீவ் காந்தி உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநில விவசாயஅணி துணைசெயலாளர் சாமிநாதன், அரியலூர் மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.