செய்திகள்
காயம்

அரியலூர் அருகே விபத்து- திருச்சி டி.எஸ்.பி.,காயம்

Published On 2019-08-24 11:40 GMT   |   Update On 2019-08-24 11:40 GMT
அரியலூர் அருகே இன்று ஜீப் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் திருச்சி டி.எஸ்.பி., காயம் அடைந்தார்.

அரியலூர்:

தமிழகம் முழுவதும் நாளை காவலர் பணிக்கான தேர்வு நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் தேர்வு கண்காணிப்பு பணியில் திருச்சி டி.எஸ்.பி.குணசேகர் ஈடுபடுகிறார். இதற்காக அவர் இன்று திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக அரியலூருக்கு போலீஸ் ஜீப்பில் சென்றார்.

அரியலூர் சடைக்கன் பட்டி கிராமம் அருகே செல்லும் போது முதியவர் ஒருவர் சைக்கிளில் குறுக்கே சென்றார். அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் சிவா,ஜீப்பை ஒரு பக்கமாக திருப்பினார். இதில் ஜீப் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிரைவர் சிவா மற்றும் டி.எஸ்.பி. குணசேகர் காயமடைந்தனர். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அரியலூர் எஸ்.பி. சீனிவாசன், டி.எஸ்.பி. இளஞ்செழியன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறியதுடன்,மருத்துவ சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

Tags:    

Similar News