செய்திகள்
கைது

அரூர் அருகே மான் வேட்டையாடியவர் கைது

Published On 2019-08-21 16:45 GMT   |   Update On 2019-08-21 16:45 GMT
அரூர் அருகே மானை வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
அரூர்

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் வனச்சரக அலுவலர் கிருஷ்ணன், வாதாப்பட்டி பிரிவு வனவர் வேடியப்பன், வனக்காப்பாளர்கள் திருப்பதி, வசந்தராஜ், காளியப்பன், வனக்காவலர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் அரூர் அருகே வாதாப்பட்டி பிரிவு செல்லம்பட்டி பீட் பொய்யப்பட்டி காப்புக்காடு கரடிதடம் சரகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காப்புக்காட்டில் ஒரு நபரை பார்த்து அவரை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அவர் முத்தானூர் கிராமத்தை சேர்ந்த ஜடையகவுண்டர் மகன் தங்கம் (வயது 37) என்று தெரியவந்தது. அவர் காப்புக்காட்டில் வேட்டை நாயை விட்டு மானை கடிக்க செய்து மானை கொன்று அதனை எடுத்துச் சென்றுள்ளார். அதனை அருகிலுள்ள பாறையின் மீது போட்டு தோலினை உரித்து ஒரு பக்கத்திலும், தலையை வெட்டி மற்றொரு பக்கத்தில் வீசிவிட்டு அதன் உடல் பாகத்தை துண்டுதுண்டாக வெட்டி கறியாக்கியுள்ளார்.

அந்த கறியை 10 பொட்டலங்களில் கட்டிவைத்துள்ளார். சுமார் 2 கிலோ கறியை பாத்திரத்தில் வைத்து சமைத்து சாப்பிட ஆரம்பித்தார். அப்போது வனத்துறையினர் வரும் சத்தம் கேட்டுள்ளது. உடனே அங்கிருந்து தப்பிக்க நினைத்து ஓடியபோது வனத்துறையினரால் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் முன் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் தங்கத்தை கைது செய்து வனத்துறையினர் அரூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
Tags:    

Similar News