செய்திகள்
தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி உயிரிழப்பு
தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் வாய்க்கால்கரை, வெற்றி நகரைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று மாலை நடுமேடு பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமியைக் கும்பிட்டு பொங்கல் வைத்தனர்.
பொங்கல் வைக்கும் அருகே மரம் தேன் கூடு ஒன்று இருந்தது. அதில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. இந்நிலையில் பொங்கல் வைக்கும்போது ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக மரத்திலிருந்த தேனீக்கள் அந்த கும்பலை விரட்டி விரட்டி கொட்டியது.
இதில் பிரியா(வயது 24) , ராஜபூபதி(வயது 23), லட்சுமணன்(வயது 58), பாலாஜி (வயது 30), குழந்தைஅம்மாள்(வயது 80), இரண்டரை வயது குழந்தை உள்பட 12 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை குழந்தை அம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு கருங்கல்பாளையம் வாய்க்கால்கரை, வெற்றி நகரைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று மாலை நடுமேடு பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமியைக் கும்பிட்டு பொங்கல் வைத்தனர்.
பொங்கல் வைக்கும் அருகே மரம் தேன் கூடு ஒன்று இருந்தது. அதில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. இந்நிலையில் பொங்கல் வைக்கும்போது ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக மரத்திலிருந்த தேனீக்கள் அந்த கும்பலை விரட்டி விரட்டி கொட்டியது.
இதில் பிரியா(வயது 24) , ராஜபூபதி(வயது 23), லட்சுமணன்(வயது 58), பாலாஜி (வயது 30), குழந்தைஅம்மாள்(வயது 80), இரண்டரை வயது குழந்தை உள்பட 12 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை குழந்தை அம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.