செய்திகள்
கொலை

வேலூர் சேண்பாக்கத்தில் வாலிபர் வெட்டிக் கொலை

Published On 2019-08-05 11:33 GMT   |   Update On 2019-08-05 11:33 GMT
வேலூர் சேண்பாக்கத்தில் மாட்டுவண்டி தொழிலாளியை வெட்டி கொன்று சாலையோரம் வீசியுள்ளனர்.

வேலூர்:

வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த சேகர் (வயது 35). மாட்டுவண்டி ஓட்டி வந்தார். இன்று காலை சேண்பாக்கம் வளைவு அருகே சர்வீஸ் சாலையில் வெட்டுக் காயத்துடன் இறந்து கிடந்தார்.

அவரது தலையில் அரிவாள், கத்தியால் வெட்டப்பட்டிருந்தது.

இன்று காலை வாக்கிங் சென்றவர்கள் இதனைக் கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்து வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்தவர்கள் யார்? என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேகர் நேற்று இரவு யாருடன் வெளியே சென்றார் என விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News