செய்திகள்
கலைவடிவன்

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து விடுதலை சிறுத்தை பிரமுகர் பலி

Published On 2019-08-02 07:33 GMT   |   Update On 2019-08-02 07:33 GMT
மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து விடுதலை சிறுத்தை பிரமுகர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அடுத்த புக்கத்தூர் பழைய காலனியை சேர்ந்தவர் கலை மூர்த்தி என்ற கலைவடிவன் (வயது50). விடுதலை சிறுத்தை கட்சியில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்தார்.

கடந்த 28-ந்தேதி இரவு அவர் செங்கல்பட்டு மணிகூண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திடீர் என்று மோட்டார் சைக்கிளை நிறுத்தும் போது தவறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த கலைவடிவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலைவடிவன் இறந்தார்.

இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News