செய்திகள்
தீக்குளிப்பு

தாம்பரம் அருகே கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை

Published On 2019-07-27 09:00 GMT   |   Update On 2019-07-27 09:00 GMT
தாம்பரம் அருகே குடும்ப தகராறு காரணமா கணவன், மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம்:

பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். (37) லாரி டிரைவர். இவரது மனைவி கிருஷ்ணம்மாள் (26).

இருவரும் காதலித்து கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின் தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்கரணை பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.

அய்யனாருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்று இரவு ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணம்மாள் மண்எண்ணையை எடுத்து தன் உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். அப்போது அய்யனார், தானும் தற்கொலை செய்து கொள்வதாக கூறி தன் மீதும் மண்எண்ணெய் ஊற்றி பற்ற வைத்தார்.

பதறிப்போன மனைவி கணவனை காப்பாற்ற முயன்ற போது இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்தனர். தீயில் கருகிய இருவரையும் மீட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த இருவரும் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து பீர்க்கன்காரனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
Tags:    

Similar News