செய்திகள்
பெண் கொலை

திருப்போரூர் அருகே தலையில் கல்லைபோட்டு பெண் கொடூர கொலை

Published On 2019-07-26 17:07 IST   |   Update On 2019-07-26 17:07:00 IST
திருப்போரூர் அருகே தலையில் கல்லைபோட்டு பெண் கொடூர கொலை

திருப்போரூர்:

திருப்போரூரை அடுத்த வெண்பேடு மேட்டுத்தெரு வில் வசித்து வந்தவர் கெங்கம்மாள் (வயது 70). இவருக்கு சங்கர், டில்லி என்ற 2 மகன்களும், 2 மகள்களும் இருந்தனர்.

மகன் டில்லி ஏற்கனவே இறந்து விட்டதால் அவருடைய மனைவியும், மருமகளான பார்வதியுடன் கெங்கம்மாளை வசித்து வந்தார். அவருக்கு மற்றொரு மகனான சங்கருடன் பேச்சு வார்த்தை இல்லை என்று கூறப்படுகிறது.

நேற்று காலை கெங்கம்மாள் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. அவரை தேடி வந்தனர்.

இநத் நிலையில் கெங்கம்மாள் அப்பகுதியில் உள்ள மலைப்பகுதியில் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். காயார் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சொத்து பிரச்சனையில் கெங்கம்மாள் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக கொலையான கெங்கம்மாளின் மகன் சங்கர் மற்றும் பேரன் கார்த்திக் ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News