செய்திகள்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

சிலை கடத்தலில் தொடர்பு என்பது பொய்- அமைச்சர்கள் பேட்டி

Published On 2019-07-25 13:08 GMT   |   Update On 2019-07-25 13:08 GMT
சிலை கடத்தலில் நாங்கள் ஈடுபட்டதாக வெளியான தகவல் பொய்யானது என்று அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.
வேலூர்:

சிலை கடத்தல் வழக்கில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொன் மாணிக்கவேல், “சிலை கடத்தல் வழக்கில் 2 அமைச்சர்களுக்கு தொடர்புள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி இருந்தார்.

இது தொடர்பான ஆதாரங்களுடன் ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கி இருந்தது. 

இந்நிலையில் ஆம்பூரில் பேட்டியளித்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் , சேவூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:- 

பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் யார் பெயரையும் குறிப்பிடாத நிலையில் எங்களுக்கு எதிராக திட்டமிட்டு பொய் செய்தியை தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த 2 அமைச்சர்கள் நாங்கள் என்பது முற்றிலும் பொய்யானது. செய்தியை வெளியிட்ட அந் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் 

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News