செய்திகள்
பல்லாவரம் அருகே வங்கியில் தீ விபத்து
பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள வங்கியில் இன்று அதிகாலையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாம்பரம்:
பல்லாவரத்தை அடுத்த பம்மல், கிருஷ்ணா நகரில் சிண்டிகேட் வங்கி உள்ளது.
இன்று அதிகாலை 3 மணி அளவில் வங்கிக்குள் திடீரென தீப்பிடித்து கரும் புகை வெளியே வந்தது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வங்கியின் காவலர் சங்கர்நகர் போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தார்.
தாம்பரத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் இந்த தீ விபத்தில் 4 ஏ.சி., 3 கணினி மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. நகை-பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கரில் தீ பரவாததால் அவை தப்பியது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லாவரத்தை அடுத்த பம்மல், கிருஷ்ணா நகரில் சிண்டிகேட் வங்கி உள்ளது.
இன்று அதிகாலை 3 மணி அளவில் வங்கிக்குள் திடீரென தீப்பிடித்து கரும் புகை வெளியே வந்தது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வங்கியின் காவலர் சங்கர்நகர் போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தார்.
தாம்பரத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் இந்த தீ விபத்தில் 4 ஏ.சி., 3 கணினி மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. நகை-பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கரில் தீ பரவாததால் அவை தப்பியது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.