செய்திகள்
கைது

வேலூர் தேர்தலையொட்டி ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு 20 பேர் அதிரடி கைது

Published On 2019-07-22 11:23 GMT   |   Update On 2019-07-22 11:23 GMT
வேலூர் தேர்தலையொட்டி ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்:

வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளன.

தேர்தலின் போது பிரச்சனை செய்பவர்கள் மற்றும் ரவுடிகள் பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 20 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யபட்டனர். மேலும் பட்டியலில் உள்ளவர்களை தேடிவருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த 6 மாதங்களாக 369 ரவுடிகள் கைது செய்யபட்டுள்ளனர். இதில் 35 பேர் குண்டர் சட்டத்தில் ஜெயலில் அடைக்கபட்டனர்.

தேர்தலின் போது பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் என கண்டறியபட்டால் அவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News