செய்திகள்
மரணம்

ஆம்பூர் அருகே கிணற்றில் பாறை சரிந்து தொழிலாளி பலி

Published On 2019-07-22 11:20 GMT   |   Update On 2019-07-22 11:20 GMT
ஆம்பூர் அருகே கிணற்றில் பாறை சரிந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அணைக்கட்டு:

மாதனூர் அடுத்த பாலூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது விவசாய நிலம் கிணறு உள்ளது. விவசாய நிலத்தை ஆழப்படுத்துவதற்காக நேற்று கிணற்றுக்குள் இருந்த பாறைகளுக்கு வெடி வைத்தனர்.

இன்று காலை ராமமூர்த்தி, மாதனூர் அடுத்த பட்டுவாம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (48), உள்பட 5 பேர் கிணற்றுக்குள் இறங்கி வெடி வைத்து தகர்த்த பாறைகளை கிரேன் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு பக்கத்தில் இருந்த பாறை சரிந்து செல்வராஜ் மீது விழுந்தது. செல்வராஜ் பாறையின் அடியில் சிக்கி உயிருக்கு போராடினார். கிணற்றில் இருந்தவர்கள் உடனடியாக மேலே வந்து மேலும் சிலரை அழைத்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி பாறையை அகற்றி மயங்கிய நிலையில் கிடந்த செல்வராஜை மீட்டனர்.பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மாதனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்வராஜை பரிசோதித்த டாக்டர்கள் செல்வராஜ் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வராஜ் இறந்ததை கேள்விப்பட்ட அவரது உறவினர்கள் செல்வராஜ் இறப்புக்கு நஷ்டஈடு கேட்டு ராமமூர்த்தி வீட்டை முற்றுகையிட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags:    

Similar News