செய்திகள்
வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19-ந்தேதி நடக்கிறது

Published On 2019-07-17 10:38 GMT   |   Update On 2019-07-17 10:38 GMT
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வருகிற 19-ந்தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ‘வேலைவாய்ப்பு வெள்ளி’ என்ற தலைப்பின் கீழ் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்த முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். வேலைநாடுநர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பினைப் பெறலாம்.

அதன் அடிப்படையில் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை (ஐ.டி.ஐ. டிப்ளமோ உள்பட)

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவர்களுக்கும், பதிவினை தொடர்ந்து புதுப்பித்து வருபவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் கல்விச் சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இம்முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவுமூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News