செய்திகள்
விபத்து

தண்டவாளத்தை கடந்த வாலிபர் ரெயில் மோதி பலி - போலீசார் விசாரணை

Published On 2019-07-16 14:17 GMT   |   Update On 2019-07-16 14:17 GMT
ஈரோடு அருகே தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி வாலிபர் பலியானார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு வீரபாண்டி ரெயில் நிலையத்திற்கும், மகுடஞ்சாவடி ரெயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட தண்டவாளத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பன போன்ற விவரம் தெரியவில்லை.

போலீசாரின் விசாரணையில் அந்த அந்த நபர் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி இறந்தது தெரியவந்தது.

அவர் வெள்ளை நீலம் கலந்த கோடு போட்ட சட்டை அணிந்து இருந்தார். சட்டை காலரில் சுரேஷ் கே குமரி என அச்சிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News